பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 25 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர்.